fbpx

Edappadi K. Palaniswami | குறுவை சாகுபடி பாதிப்பு..!! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000..!! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi K. Palaniswami | தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.

சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் திறக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

Read More : https://1newsnation.com/public-examination-the-union-minister-made-an-important-announcement-to-the-students-of-class-10-and-12/

Chella

Next Post

"இந்த முறை பாஜக வீட்டுக்கு போவது கன்ஃபார்ம்"... தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து மல்லிகார்ஜுனா கார்கே பேச்சு.!

Tue Feb 20 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் ஆட்சியை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் திமுக ஆம் ஆத்மி சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற இந்தியாவின் முக்கியமான கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் […]

You May Like