fbpx

’பாடம் நடத்தும்போது பலான படம்’..!! ’மெகா ஸ்க்ரீனில் முரட்டு குத்து’..!! தெறித்து ஓடிய மாணவிகள்..!! நாகையில் ஷாக்

தனியார் பள்ளியில் பாடம் நடத்தும்போது ஆபாச வீடியோ ஓடிய சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணினி பாடம் நடத்துவதற்காக ப்ரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்தபோது யூடியூப் இணைப்பு மூலமாக புரொஜெக்டரில் வகுப்பு நடைபெற்றுள்ளது.

’பாடம் நடத்தும்போது பலான படம்’..!! ’மெகா ஸ்க்ரீனில் முரட்டு குத்து’..!! தெறித்து ஓடிய மாணவிகள்..!! நாகையில் ஷாக்

அப்போது, திடீரென ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனைக் கண்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் மூன்றரை நிமிடங்கள் அந்த ஆபாச வீடியோ ஓடிய நிலையில், மாணவ-மாணவிகள் செய்வதறியாது புத்தகத்தால் முகத்தை மூடியவாறு வகுப்பறை விட்டு வெளியேறி உள்ளனர். ஆபாச வீடியோவை நிறுத்தத் தெரியாத ஆசிரியை பள்ளியின் மற்றொரு ஆசிரியரை அழைத்து ப்ரொஜெக்டரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்கக் கூடாது என மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் மிரட்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

’பாடம் நடத்தும்போது பலான படம்’..!! ’மெகா ஸ்க்ரீனில் முரட்டு குத்து’..!! தெறித்து ஓடிய மாணவிகள்..!! நாகையில் ஷாக்

இந்நிலையில், அதில் ஒரு மாணவி பள்ளியில் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவியோடு சென்று பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பள்ளியில் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவை அடுத்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அலுவலர் உள்ளிட்டோர் பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். 

’பாடம் நடத்தும்போது பலான படம்’..!! ’மெகா ஸ்க்ரீனில் முரட்டு குத்து’..!! தெறித்து ஓடிய மாணவிகள்..!! நாகையில் ஷாக்

அப்போது ஆபாச வீடியோ ஓடியது உறுதி செய்யப்பட்ட நிலையில், வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியதை ஆட்சியரிடம் புகார் அளித்ததை அறிந்த பள்ளி முதல்வர் ஹோனா, மாணவியின் பெற்றோரை தொடர்புக் கொண்டு எடுத்த எடுப்பிலயே “ஏய்யா” என ஒருமையில் மிரட்டும் தொனியில் “என்னிடம் சொல்ல மாட்டியா?” என பேசியும், புகார் அளித்த மாணவியிடம் மீண்டும் மீண்டும் என்ன வீடியோ ஓடியது என கேட்டும், வீட்டில் போய் ஏன் சொன்ன? என்னிடம் சொல்ல வேண்டியது தானே என்று மிரட்டலாக பேசி உள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

#GUJARAT-Election: முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது....

Thu Dec 1 , 2022
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நகர்ப்புறங்களில் 3311 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 89 […]

You May Like