fbpx

Election | ’தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிட தடை’..!! சத்யபிரதா சாஹூ அதிரடி..!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் தேதியிட்டு அறிவிப்பு அரசாணை வெளியானதால் சர்ச்சை எழுந்தது. துறைகளின் செயலர்கள் அரசாணை தொடர்பான பதிவேட்டில் இறுதி அரசாணை வெளியிட்ட பின்பு ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும்.

ஒரு கோடிட்டு முடிப்பதை நகல் எடுத்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இதனால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். கோடிட்டு முடித்த அரசாணை நகலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள்ளாக அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : Annamalai | மக்களவை தேர்தலில் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டி..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!

Chella

Next Post

Helmet | இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..? போக்குவரத்துத்துறை அதிரடி..!! வெளியான அறிவிப்பு..!!

Fri Mar 1 , 2024
சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், தற்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினாலும், ரூ.2,000 விதிக்கப்படும் என்று புதிய விதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்துகிறது. […]

You May Like