fbpx

மின் கட்டண உயர்வு..!! தவெக தலைவர் விஜய் மட்டும் மௌனம் காப்பது ஏன்..? திமுகவின் ஆதரவாளரா..? விளாசும் நெட்டிசன்ஸ்..!!

மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் பேசி உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மட்டும் மௌனமாக இருப்பது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மட்டும் மின்கட்டண உயர்வு பற்றி பேசாமல் மௌனமாகவே இருப்பது அவர் திமுக ஆதரவாளரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆரம்பத்தில் திமுக எதிர்ப்பாளர் போல் காட்டிக்கொண்ட விஜய், அதன் பிறகு நீட் தேர்வு விஷயத்தில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார் என்பதும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசுக்கு எதிரானவர் என்றும் காட்டிக் கொண்டார். இந்நிலையில், தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை பார்த்தால் அவரும் கமல்ஹாசன் போல் திமுகவின் ஆதரவாளரா என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் எழுப்பி வருகின்றனர்.

Read More : மக்களே பாதுகாப்பா இருங்க..!! நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!!

English Summary

While all the opposition parties in Tamil Nadu are talking about the increase in electricity tariff, why is Tamil Nadu Victory Kazhagam President Vijay silent? Questions are being raised on social media.

Chella

Next Post

’இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு’..!! ’அப்படினா அது பொய்யா’..? நாசா விஞ்ஞானிகளின் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!

Wed Jul 17 , 2024
The earth does not really revolve around the sun. The reason for this change is moderation.

You May Like