fbpx

VIVO மொபைல் நிறுவனத்திற்கு சொந்தமான 44 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!

விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vivo to set up over 250 exclusive stores this year to expand retail network  - The Economic Times

சீனாவின் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான சியோமி, இசட் டி இ ஆகியவற்றின் நிதி செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு விசாரணைகள் நடத்தி வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. கடந்த மே மாதம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999 இன் விதிகளின் கீழ் சியோமி நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஆனால், அந்த உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நடு இரவில் காணாமல் போன மனைவி: தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்...!

Tue Jul 5 , 2022
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(33). இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (26). சில காலமாக கார்த்திகேயன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று கார்த்திகேயன் கண் விழித்து பார்த்தபோது காயத்ரியை […]

You May Like