தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தடவைகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு நியாய விலை கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகங்களில் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதற்கான பணியில் இல்லம் தேடி கல்வியை திட்டத்தைச் சார்ந்த 6000 தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக் புழுக்களை சேர்ந்தவர்கள் ஈடுபட இருக்கிறார்கள். இந்த நிலையில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழக மின் ஆளுமை முகமை இயக்ககம் கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம் என்ற பெயரில் மொபைல் போன் செயலி ஒன்றை புதிதாக ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் தன்னார்வலர்கள் தங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை பதிவிட வேண்டும் அதன் பிறகு உள் நுழைந்து பின்னர். புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என்று இரு பிரிவுகள் இருக்கும் அதில் புதிய படிவத்தை தேர்வு செய்து விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சமர்பிக்க வேண்டும்.
இந்த மொபைல் போன் செயலி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லை அதோடு, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப நிலை தொடர்பாகவும் அதில் அறிந்து கொள்ள இயலும் என்றும் தன்னார்வலர்களுக்கு செயலியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.