தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஊதியத் தரவு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 லட்சத்து மூவாயிரம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 27,700 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் சேர்க்கப்பட்ட 18 லட்சத்து மூவாயிரம் ஊழியர்களில் 8 லட்சத்து முப்பதாயிரம் ஊழியர்கள் 25 வயது வரை உடையவர்கள் ஆவர். இது நாட்டில் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதைக் காட்டுகிறது.பெண் உறுப்பினர்களில் மூன்று லட்சத்து 44 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 80 திருநங்கை தொழிலாளர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.