நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 149 இன் 2-வது விதி, 2014 ஆம் ஆண்டு நிறுவனங்களின் (இயக்குனர்கள் நியமனம் மற்றும் தகுதி) விதிகள் 3 உடன் இணைந்து, பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் மற்றும் ரூ .100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ .300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்று முதல் கொண்ட ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரை நியமிப்பதை கட்டாயமாக்குகிறது.
ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதி அறிக்கையுடன் இணைக்கப்பட வேண்டிய அதன் வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 [2013 இன் 14] இன் கீழ் உள் புகார்கள் குழுவை அமைப்பது தொடர்பான விதிகளுக்கு நிறுவனம் இணங்கியுள்ளது என்ற அறிக்கையை சேர்க்க வேண்டும்.
மேலும், பெண் ஊழியர்கள் மற்றும் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. அதன் படி, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில், மற்ற தொழில்முனைவோரை விட பெண்களுக்கு கூடுதல் பயன்கள் அளிக்கப்படுகின்றன. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம, ஒரு பெரிய கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டமாகும், இதில் கணிசமான பயனாளிகள் பெண்கள் ஆவர், அவர்களுக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது.
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டமானது, பசுமை நிறுவனத்தை அமைப்பதற்காக, குறைந்தபட்சம் ஒரு பட்டியல் இன அல்லது பட்டியல் பழங்குடி கடனாளி மற்றும் ஒரு பெண் கடன் வாங்குபவருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான மதிப்புள்ள கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளிடமிருந்து எளிதாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. “யஷஸ்வினி” என்ற ஒரு முயற்சி 27.06.2024 அன்று தொடங்கப்பட்டது, இது பெண் தொழில்முனைவோருக்காக பிரச்சாரம் செய்வதையும், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கவனம் செலுத்தி, அங்கு வசிக்கும் பெண்களின் திறனை வளர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.