fbpx

இன்சூரன்ஸ் மோசடி வழக்கு…! விசாரணைக்கு ஆஜராக காஷ்மீர் முன்னாள் ஆளுநருக்கு சிபிஐ நோட்டீஸ்…!

இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‌

இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஏப்ரல் 27 முதல் 29 வரை ஆஜராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியது. அக்டோபர் 2021 இல், ஆர்எஸ்எஸ் தலைவருடன் தொடர்புடைய இரண்டு கோப்புகளை அழிக்க தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மாலிக் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்து ஏப்ரல் மாதம் 14 இடங்களில் சோதனை நடத்தியது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சினாப் வெள்ளி பவர் பிராஜக்ட் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

#Weather: இன்றும், நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...! வெப்பநிலை அதிகரிக்கும்...!

Sat Apr 22 , 2023
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளி மண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்கு திசை காற்றும்‌,மேற்குத்‌ திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன்‌ காரணமாக இன்று தமிழ்நாட்டில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி,மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி […]

You May Like