fbpx

பரபரப்பு..! பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

சென்னையில் பாஜக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் மதன கோபால், இவர் பாஜகவின் பட்டியல் அணி நிர்வாகியாக உள்ளார். மதன கோபால் சரித்திர பதிவேடு குற்றவாளியும் ஆவார். இந்நிலையில், மதன கோபால் வீட்டில் இல்லாத சமயத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் கு ண்டு வீசியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாஜக தொண்டர்கள் மீது திமுக அரசு திட்டமிட்டு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதாகவும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இதுகுறித்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழு தமிழகம் வரும் நிலையில், தற்போது பாஜக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

குறட்டையால் பெரிதும் பாதிக்கப்படும் நபரா நீங்கள்..! குறட்டை வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுங்க!

Wed Oct 25 , 2023
தூங்கும்போது வரும் குறட்டை பிரச்சனையை சரி செய்யும் சில வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். முன் ஒரு காலத்தில் குறட்டையெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் வந்தது. ஆனால் இப்போது, இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பு வயதினரும் குறட்டை விட ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இந்த குறட்டை நோயால் பாதிப்படைய என்ன காரணம்? அதற்கு நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே என்கிறார்கள் மருத்துவர்கள். நாம் தூங்கும் பொழுது நாசி மற்றும் […]

You May Like