fbpx

செம அறிவிப்பு…! இனி கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு…! முழு விவரம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி, கட்டிடப் பணி முடிப்பு சான்று பெற விரும்பும் விண்ணப்பதாரர் அல்லது உரிமையாளர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் அல்லது பதிவு பெற்ற அபிவிருத்தியாளர் மற்றும் யாராக இருந்தாலும், கட்டிடப் பணி முடிவு சான்றுக்கான விண்ணப்பத்தை உரிய படிவங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ., 14 மீ. உயரம் வரை கட்டப்பட்டால் அவற்றுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை என்று தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும். இந்த விதிகளில் திருத்தம் செய்து தர வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையேற்று கடந்த மார்ச் மாதம், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்றிருந்ததை அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என திருத்தம் செய்யப்பட்டது. எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. அதேபோல், அதிக உயரமில்லாத கட்டடங்களை பொருத்தவரை, அந்தக் கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது.

தற்போது வணிகக் கட்டடங்களுக்கும் இந்த சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்பதுடன், வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ. வரை மற்றும் உயரத்தில் 14 மீ. என்பதும் சோ்க்கப்பட்டுள்ளது.இதன்படி, 300 ச.மீ. வரையும், உயரத்தில் 14 மீ மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும் இனி பணி நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Exemption from getting Building Completion Certificate from now on

Vignesh

Next Post

Wow...! 6 முதல் 12-ம் வகுப்பு வரை... மாணவர்களுக்கு ரூ.10,000 முதல் பரிசு...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Tue Jul 2 , 2024
Prize from Rs.10,000 to students from class 6 to 12

You May Like