fbpx

விருதுநகர் கல்குவாரியில் வெடிவிபத்து..!! 4 பேர் உயிரிழப்பு..!! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம்..!!

விருதுநகர் அருகே காரியப்பட்டியில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. ஆவியூர் அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வெடிவிபத்தில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் எழுந்துள்ளது.

உழைப்பாளர்கள் தினத்தில் விபத்து நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீழ உப்பிலிகுண்டு தனியார் கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!

Chella

Next Post

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார்..? இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை! தற்போது ஹொட் இவர் தான்..!

Wed May 1 , 2024
mamitha baiju | Who is this child star in the photo?

You May Like