சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவு கடந்த மே 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளில் மொத்தம் 2,004 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலை கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.