fbpx

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்….! மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன் திருப்பூரில் பரபரப்பு….!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2வதாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதோடு பவித்ராவிற்கும் இது 2வது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற இன்றைய தினம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அது கைகலப்பாக மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மணிகண்டன், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து பவித்ராவின் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு பிறகு பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், மணிகண்டனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.

Next Post

திடீரென்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் கூக்குரலிட்ட பொதுமக்கள்…..! குறுக்கே பாய்ந்த ராணுவ வீரர் குவியும் பாராட்டுக்கள்….!

Sat Jul 1 , 2023
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று அத்திக்குன்னா பகுதியில் இருக்கின்ற தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் என்ற சிறுவன் அத்திக்குன்னா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த சிறுவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது […]

You May Like