தமிழ் சினிமாவில் பிரபலமான கிட்டார் இசை கலைஞர் ஆர் சந்திரசேகர் மரணம் அடைந்தார். இசைஞானி இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறது என்ற பாடலில் கிட்டார் வாசித்ததன் மூலம் புகழ்பெற்றவர் இவர். தமிழ் சினிமாவின் முன்னணி இசைக் கலைஞர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பழம்பெறும் இசையமைப்பாளர்களான எம் எஸ் விஸ்வநாதன், சங்கர் -கணேஷ், திவாகர் கே வி மகாதேவன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோருடன் கிட்டார் இசை கலைஞராக பணியாற்றி இருந்தார் இவர்.
இசைஞானி இளையராஜாவின் முதல் படமானஅன்னக்கிளி திரைப்படத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றி வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இளையநிலா பொழிகிறது பாடல் தான் இவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தது. இவரது மறைவிற்கு இசை கலைஞர்கள் மற்றும் தொலைத் துறையினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.