fbpx

“இளையநிலா பொழிகிறதே” பிரபல கிடாரிஸ்ட் ஆர்.சந்திரசேகர் காலமானார்! திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் பிரபலமான கிட்டார் இசை கலைஞர் ஆர் சந்திரசேகர் மரணம் அடைந்தார். இசைஞானி இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறது என்ற பாடலில் கிட்டார் வாசித்ததன் மூலம் புகழ்பெற்றவர் இவர். தமிழ் சினிமாவின் முன்னணி இசைக் கலைஞர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பழம்பெறும் இசையமைப்பாளர்களான எம் எஸ் விஸ்வநாதன், சங்கர் -கணேஷ், திவாகர் கே வி மகாதேவன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோருடன் கிட்டார் இசை கலைஞராக பணியாற்றி இருந்தார் இவர்.

இசைஞானி இளையராஜாவின் முதல் படமானஅன்னக்கிளி திரைப்படத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றி வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இளையநிலா பொழிகிறது பாடல் தான் இவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தது. இவரது மறைவிற்கு இசை கலைஞர்கள் மற்றும் தொலைத் துறையினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Baskar

Next Post

மனைவி வீட்டு வேலை தனியாக செய்ததற்காக 1.75 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம்!

Thu Mar 9 , 2023
ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவருக்கு விவாகரத்தின் போது 1.75 கோடி ரூபாய் வழங்க அவரது கணவருக்கு கட்டளையிட்டு இருக்கிறது நீதிமன்றம். ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தெற்கு அண்டலூசியா மாகாண நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கியதோடு கணவர் அந்தப் பெண்ணுக்கு 204,624.86 யூரோக்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. […]

You May Like