fbpx

பிரபல தயாரிப்பாளரின் மகள் புற்றுநோயால் மரணம்..!! 20 வயசு தான் ஆகுது..!! ரசிகர்கள் இரங்கல்..!!

நடிகரும், தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள் நேற்று காலமானார். அவருக்கு வயது 20. நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த இவர், நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர்

தயாரிப்பாளரின் மகளான திஷா குமார் செப்டம்பர் 6, 2003ஆம் ஆண்டு கிரிஷன் குமார் மற்றும் தன்யா சிங்கின் மகளாக பிறந்தார். திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு பல ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரது குடும்பம் சினிமாவில் பிரபலமாக இருந்த போதும், திஷா திரைப்பட விழாக்களிலோ, பொது நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டது இல்லை.

இந்நிலையில், நீண்ட நாட்களாக கேன்சரால் போராடிக்கொண்டிருந்த திஷா குமார் நேற்று உயிரிழந்தார். இவரின் அகால மரணம் குறித்து குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ”அவர் புற்று நோயுடன் போராடி வந்தார். அதற்கான சிகிச்சை எடுத்து வந்த போதும், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமை மதிப்பளிக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமார் சனம் என்ற திரைப்படம் மூலம் பிரபலமானவர். அவர் தனது மருமகன் பூஷன் குமாருடன் இணைந்து டி-சீரிஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இருவரும் இணைந்து லக்கி: நோ டைம் ஃபார் லவ், ரெடி, டார்லிங், ஏர்லிஃப்ட் மற்றும் சத்யமேவ் ஜெயதே உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்துள்ளனர். கார்த்திக் ஆரியன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பூல் புலையா 2 படத்தையும் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படம் 2022 இல் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதில், கியாரா அத்வானி நடித்தது மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடிக்கு மேல் சம்பாதித்தது. இது தவிர, ரன்பீர் கபூரின் அனிமல் படத்தையும் கிரிஷன் மற்றும் பூஷன் இணைந்து தயாரித்திருந்தனர்.

Read More : அடுத்த வாரம்..!! கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்..!! தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாகம்..!!

English Summary

Actor and producer Krishan Kumar’s daughter passed away yesterday. He was 20. He was battling cancer for a long time and passed away yesterday, his family said

Chella

Next Post

கரைபுரண்டோடும் வெள்ளம்..!! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Fri Jul 19 , 2024
A flood warning has been issued for the people living along the banks of the KRS Dam in Karnataka.

You May Like