fbpx

பிரபல சின்னத்திரை இயக்குனரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? விசாரணையில் அதிர்ச்சி..!!

பிரபல சின்னத்திரை இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றான வாணி ராணி சீரியலை இயக்கியவர் இயக்குநர் ஓ.என். ரத்னம். இவரது வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி போன்ற சீரியல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

இயக்குநர் ஓ.என். ரத்னம் காதலித்து பல எதிர்ப்புகளையும் மீறி பெற்றோரின் சம்மதத்துடன் பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள். இருவருக்குமே பொள்ளாச்சியில் ஒரே கிராமத்தில் வசித்து வந்தவர்கள் தான். தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா-பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். கணவன் மனைவி மட்டும் தனியாக சென்னையில் இருந்துள்ளனர். இந்நிலையில், ரத்னம் – பிரியா தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு, சண்டை ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இவர்களது மகன்கள் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக ரத்னா பேருந்து நிலையம் சென்ற போது பிரியா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர்கள் வருவதற்குள் வீட்டில் தூக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

மகன்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய ரத்தினம் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கில் தொங்கிய பிரியாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மனைவியை இறக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். பின்னர், அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருவரும் கடும் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டவர்கள்.

பிரியா அவர்களின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என அடம்பிடித்து தான் ரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். அப்படி போராடி திருமணம் செய்து கொண்டவர் சிறு சிறு பிரச்சனைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பிரியாவின் இந்த தற்கொலை முடிவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கணவரை தேடி காவல்நிலையம் சென்ற பெண்..!! 8 நாட்களாக போலீசும், ஊர் தலைவரும் செய்த காரியம்..!!

Fri May 26 , 2023
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்திருக்கிறார். அதே ஊரிலேயே கணவனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தனது கணவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என்பதால் தெதாகஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். அந்த காவல் நிலையத்தின் அதிகாரி நீரஞ்குமார் இது குறித்து அந்த கிராமத் தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் காவல் நிலையத்திற்கு வந்து பெண்ணின் கணவரை கண்டுபிடிக்க உதவி செய்வதாக […]

You May Like