fbpx

Farm House | சொந்த ஊரில் சத்யராஜ் மகன் சிபிராஜ் கட்டியுள்ள பண்ணை வீடு..!! புகைப்படங்கள் வைரல்..!!

தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு கட்டியுள்ள நடிகர் சத்யராஜூவின் மகன் சிபிராஜ் தனது வீட்டுக்கு கிரகபிரவேஷம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வில்லனாக மாறி பின்னாளில் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சத்யராஜ். பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்த சத்யராஜ் இயக்குனரும் நடிகருமான மணிவண்ணனுடன் இணைந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சத்யராஜூவின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சிபிராஜ். 2003இல் வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிபிராஜ், தொடர்ந்து மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட சில படங்களில் தனது அப்பா சத்யராஜூவுடன் இணைந்து நடித்தார். பிறகு லீ, நாணயம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010இல் சிபி நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து ஜாக்சன்துரை, கபடதாரி, சத்யா, ரங்கா என வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்து நடித்தார். கடந்த ஆண்டு வெளியான மாயோன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மாயோன் 2 படம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிபிராஜ் தனது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் வளவாடி பகுதியில் பண்ணை வீடு ஒன்றை கட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வீட்டின் கிரகபிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

சென்னையை மிதக்க வைத்த ’மிக்ஜாம்’ புயல்..!! நடிகர்கள் சூர்யா - கார்த்தி நிதியுதவி அறிவிப்பு..!!

Tue Dec 5 , 2023
மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், இதுவரை கனமழையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா- கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். ‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர். நிதி மட்டுமின்றி தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட […]

You May Like