fbpx

மலைப்பாம்பை மீட்க கிணற்றில் குதித்த விவசாயி பலி …உடலில் பாம்பு சுற்றிக்கொண்டதால் நீரில் மூழ்கிய பரிதாபம்…

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க நினைத்து கிணற்றில் குதித்த விவசாயி , மலைப்பாம்பு உடலில் சுற்றிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்சின்னசாமி . விவசாயியான இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது கிணற்றில் மலைப்பாம்பு விழுந்துள்ளது. இதை வெளியே எடுக்க பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நடராஜன் என்பவர் வரவழைக்கப்பட்டார்.

நடராஜன் பாம்பை பிடிக்க கிணற்றில் இறங்கியுள்ளார். கிணற்றில் இருந்த மலைப்பாம்பை பிடித்துவிட்டு வெளியில் வரும்பொழுது பாம்பு நடராஜின் உடலை இறுகச் சுற்றிக் கொண்டது. இதனால் நடராஜ் மீண்டும் தண்ணீரில் விழுந்தார். நீச்சலடிக்க முடியாமல் சில நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

கஞ்சா போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள்; எதுவுமே செய்யாத முதல்வர்: அன்புமணி கண்டனம்..!

Mon Sep 12 , 2022
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த இளைய மகனை […]
’இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாதீங்க’..! தமிழக அரசை கேட்டுக்கொண்ட அன்புமணி..!

You May Like