fbpx

விவசாயிகளே..!! வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்திக் கொள்ளுங்கள்..!!

பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கிக் கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்குள் முடிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13-வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முதல் தவணையானது ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்குள் (பிப்ரவரி 10) முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ரூ.2,000 பணம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் வரவிருக்கும் தவணைப் பண பரிமாற்றத்திற்காக இ-கேஒய்சி அப்டேட்டில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இன்றைக்கும் இந்த வேலையை முடிக்காவிட்டால் பணத்திற்கு ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிளஸ்1 பொதுத்தேர்வு..!! மாணவர்களே இந்த வேலையை முடிச்சிட்டீங்களா..? இன்றே கடைசி நாள்..!!

Fri Feb 10 , 2023
பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தவகையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்.5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக […]

You May Like