தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில்; .தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.09.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைஸபின்பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.