fbpx

தாய் வெளியே சென்ற நேரத்தில் மகள் மீது பாய்ந்த தந்தை..!! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் தாயும், மகளும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் தாய், அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நியாசுதீன் (41) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். ஆனால், நியாசுதீனுக்கு மகள் முறை கொண்ட கல்லூரி மாணவி மீது ஒரு கண் இருந்துள்ளது.

தாய் வெளியே சென்ற நேரங்களில் நியாசுதீன் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூற கூடாது எனவும் அவர் மிரட்டியுள்ளார். இந்த கொடுமை தாங்காத மாணவி, தனது தாயிடம் இது பற்றி கூறி அழுதுள்ளார். இதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நியாசுதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஓடும் ரயிலில் நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்…..! சி ஆர் பி எஃப் வீரர் அதிரடி கைது…..!

Wed May 3 , 2023
கர்நாடக மாநிலத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரையில் செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூருவை சேர்ந்த வாசவி சவுகான்(38) தன்னுடைய 10 வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணித்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நாயகனூர் பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுரேஷ்(38) என்பவர் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like