fbpx

சூப்பர் திட்டம்…! நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி…!

நலிந்த சூழலில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தேசிய நல நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி.

மத்திய விளையாட்டு அமைச்சகம், தற்போது நலிந்த சூழ்நிலையில் வாழும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குதல், போட்டிகளின் போது காயமடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நல நிதி’ திட்டத்தை செயல்படுத்துகிறது

கடந்த 5 ஆண்டுகளில் மாநில வாரியாகவும், விளையாட்டுகள் வாரியாகவும் இந்த நிதி உதவியின் மூலம் எத்தனை விளையாட்டு வீரர்கள் பயனடைந்துள்ளனர் என்ற தகவல்கள் https://yas.nic.in என்ற இணையதளத்தில் உள்ளன. நலிவுற்ற சூழலில் வாழும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும், விளையாட்டு வீரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 10 இலட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

இடுப்பு வலியை தணிக்க, இதோ உங்களுக்கான சிறந்த மருந்து..!

Wed Aug 9 , 2023
நிலையான இடுப்பு வலி உங்கள் தினசரி வாழ்க்கையை சீர்குலைக்கும், பகல் மற்றும் இரவில் வலி ஏற்படுத்துகின்றது.நீங்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால், நீண்ட நாட்களுக்கு, நாள்பட்ட இடுப்பு வலியை உருவாக்கலாம், இடுப்பு வலி ஒருபோதும் நீங்காது மற்றும் காலப்போக்கில் மோசமடையலாம். நடைப்பயிற்சி, வசதியாக உட்காருதல் அல்லது அன்றாட செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் இடுப்பு வலி உருவாகும். இடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்கள், இடுப்பு மூட்டுக்குள் இருக்கும் சுற்றியுள்ள அமைப்புகளிலிருந்து வலி […]

You May Like