fbpx

பணத்திற்காக 71 வயது முதியவருடன் உல்லாசம்..!! ரூ.3 லட்சம் வரை அபேஸ் செய்த இளம்பெண் சிக்கியது எப்படி?

71 வயது முதியவருடன் நெருக்கமாகப் பழகி ரூ. 3 லட்சம் ஏமாற்றிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது ஆண் நண்பர்கள் மூலம் 71 வயது முதியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முதியவரும் ராஜியும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்ததை ராஜி, முதியவருக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த படங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். இதனால், பயந்துபோன முதியவர் ராஜி பணம் கேட்கும் போதெல்லாம் கொடுத்துள்ளார். இப்படி ராஜி அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.

பணத்திற்காக 71 வயது முதியவருடன் உல்லாசம்..!! ரூ.3 லட்சம் வரை அபேஸ் செய்த இளம்பெண் சிக்கியது எப்படி?

ஒரு கட்டத்தில் ராஜியின் கொடுமை தாங்க முடியாமல், முதியவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜியைக் கைது செய்தனர். முதியவர் வசதியானவர் என தெரிந்து கொண்டு திட்டம் போட்டு ராஜி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், முதியவரைப் போன்று வேறு யாரிடமாவது ராஜி பணம் பறித்து ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

முகம் தெரியாத நபருக்கு செய்த உதவி..!! ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி..!!

Fri Oct 14 , 2022
இயந்திரமயமாகி விட்ட இந்த உலகில் பணத்தைவிட நேர்மைதான் முக்கியம் என வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நெட்டிசன் ஒருவரின் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’– இது வள்ளுவர் வாக்கு. ஆனால், பலருக்கு உதவி கேட்கும்போது இருக்கும் பணிவு, பின்னாளில் மறந்து விடுகிறது. உதவி தேவைப்படும் காலத்தில், உதவி செய்தவரை கடவுளாகவே நினைத்தாலும்கூட, காலங்கள் செல்லச் செல்ல காற்றில் அவர் செய்த உதவியும் […]
முகம் தெரியாத நபருக்கு செய்த உதவி..!! ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி..!!

You May Like