கோவையில் கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டருக்கு வரும் பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கணவருக்கு தெரிந்ததால் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
கோவை கே.ஜி. சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண் .திருமணமாக இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். கணவரும் சரி உன் விருப்பம் என வேலைக்கு செல்ல அனுமதித்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்.
ஏன் தாமதமாக வருகின்றாய் என கேட்டால் வேலை அதிகமாக உள்ளது என காரணம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தினசரி வேலையை முடித்துவிட்டு வந்தவரிடம் சில மாற்றங்கள் தெரிந்ததுடன் அவர் குழந்தைகளை கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கணவர் அவர் வேலைக்கு செல்லும் இடத்திற்கு பின் தொடர்ந்துள்ளார். அப்போதுதான் மசாஜ் சென்டருக்கு வேலைக்கு செல்வது தெரியவந்துள்ளது. இரவில் பணி முடிந்ததும் வேறு சில நபர்களுடன் வெளியில் செல்வதை பார்த்துள்ளார்.
வெளியில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வீட்டுக்கு தாமதமாக வருவதை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றதும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.