முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ரூ 2,000,. 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ4,000யும்., 9 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ரூ.5,000., 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ 6,000 வழங்கப்படும்., ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய சட்ட பள்ளிகளில் படிக்கும் நபர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், சைனிக் பள்ளியில் பயின்று வரும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை தொகுப்பு நிதி கல்வி வழங்கப்படும்.எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு திருவள்ளூரில் இயங்கும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 044 -29595311 வாயிலாகவோ தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.