ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே பல மாதங்களாக
யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் அல்ல. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே இந்த சுற்றுலாப் பயணிகள் வருவதாக கூறப்படுவது மிகவும் பொய்யானது என்று அவர் தெரிவித்துள்ளார்