fbpx

கள்ளக்குறிச்சி விவகாரம்..! தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம்..? அமைச்சர் முக்கிய தகவல்..!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேவைப்பட்டால் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்து அதன் அறிக்கையை முறைப்படி காவல்துறையிடம் வழங்கி இருக்கிறார். அதேபோல் இந்த பள்ளியில் நிலைமை சரியாக 2 மாத காலம் ஆகலாம். ஆகவே, தேவைப்பட்டால் பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கலாம்.

கள்ளக்குறிச்சி விவகாரம்..! தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம்..? அமைச்சர் முக்கிய தகவல்..!

மேலும், இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது. அதேபோல் பெற்றோர்களின் உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொள்கிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. அதையொட்டி தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். அரசு உத்தரவு இல்லாமல், பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அறிவிக்கக் கூடாது. எப்போதும் மாணவர்கள் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

#Breaking News: தமிழகத்தில் மின் கட்டணம் உயருகிறது..! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

Mon Jul 18 , 2022
தமிழக மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின்கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் […]

You May Like