fbpx

“அடிச்சான் பாருய்யா அந்தர் பல்டி.”! இந்திய அணியின் முன்னாள் வீரர் அரசியல் கட்சியில் இருந்து விலகல்.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் அம்பத்தி ராயுடு. இவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடர் வெற்றிக்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் ஆந்திராவின் ஆளுங்கட்சியான யுவஜன ஸ்ரமிக்க ரித்து காங்கிரஸ் பார்ட்டியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் துணை முதல்வர் நாராயண சுவாமி ஆகியோரின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். சூரத் இந்த திடீர் முடிவால் ஆந்திரா அரசியலில் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் ராயுடு 1694 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சராசரி 47.05 ஆகும் . மேலும் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 124 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய் எஸ் ஷர்மிளாவும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த இந்த முடிவுகளால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Next Post

திடீரென சென்னை வந்த அஜித்..!! கலைஞர் விழாவில் பங்கேற்கும் விஜய்..!! பரபரப்பில் திரையுலகம்..!!

Sat Jan 6 , 2024
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதனால், இன்று நடைபெறவுள்ள கலைஞர் 100 விழாவிற்கு […]

You May Like