fbpx

கள்ள காதலியுடன் ஹோட்டல் அறையில் உல்லாசம்; தேடி வந்து மனைவி செருப்பால் அடித்த… அதிர்ச்சி சம்பவம்..!

ஆக்ரா டெல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஹாஸ்பிடலில் ஐசியூ பிரிவில் பொறுப்பாளராக வேலை செய்து வருபவர் தினேஷ் கோபால். இவர் தனது கள்ளக்காதலியுடன் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். இது பற்றிய தகவல் அவரது மனைவி நீலத்திற்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் ஹோட்டலுக்கு வந்தார்.

ஹோட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த மனைவி நீலம் ஆத்திரத்தில் தன்னுடைய செருப்பைக் கழற்றி, கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் கடுமையாக அடித்தார். அப்போது, நீலத்தின் கணவரும் அவரது கள்ளக் காதலியும் அவரிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டனர். இதனால் அவரது மனது இரங்கவில்லை. கள்ளக்காதலியின் கணவரை போன் செய்து அழைத்து அவரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

மனைவி அடிக்கும் போது தினேஷ் குழந்தைகளிடம் காப்பாற்றுங்கள் என கேட்டுள்ளார். ​​அதற்கு அவர்கள் நீங்கள் எங்கள் அப்பா என கூறுவது கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளனர். பல மாதங்களாக கணவர் வேலை என சொல்லி விட்டு கள்ளக்காதலியுடன் சுற்றி வந்து இருக்கிறார். இதனை அவரது மனைவி கையும் களவுமாக பிடித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Baskar

Next Post

’ஒவ்வொரு துறை செயலாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை ஏற்படும்’..! நீதிபதிகள் எச்சரிக்கை

Tue Sep 20 , 2022
பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like