தமிநாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வினை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வியாண்டு 1-9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடந்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும். ஏப்.29ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.