fbpx

லோகேஷ் முதல் த்ரிஷா வரை..!! சிஎஸ்கே மேட்சை பார்க்க சேப்பாக்கத்தில் குவிந்த பிரபலங்கள்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியை ஏராளமான சினிமா பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சதீஷ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சிஎஸ்கே மேட்சை கண்டு ரசித்தனர். பிகில், லவ் டுடே போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, சிஎஸ்கே மேட்சின் போது நடிகை த்ரிஷா மற்றும் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகையான நடிகை பிந்து மாதவி, தல 7 என்கிற வாசகம் அடங்கிய டீசட் அணிந்தபடி சிஎஸ்கே போட்டியை கண்டுகளித்தார். லியோ படத்தின் நாயகி த்ரிஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளிப்பதற்காக மஞ்சள் நிற உடையில் வந்து தனது தோழிகளுடன் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். நடிகை மேகா ஆகாஷ் தனது தாயாருடன் வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்தார்.

ஐபிஎல் போட்டியை காண வந்த இயக்குனர் சஞ்சய் பாரதி உடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இவர்கள் இருவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் எல்.ஜி.எம் படத்தின் குழுவினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்தனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தை புரமோட் செய்யும் விதமாக அப்படக்குழுவினர் சொப்பன சுந்தரி என எழுதப்பட்ட டீசர்ட் அணிந்து வந்து ஐபிஎல் போட்டியை கண்டுகளித்தனர். ஐபிஎல் போட்டியை காண வந்திருந்த நடிகை த்ரிஷா உடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை காண வந்திருந்த சினிமா பிரபலங்கள் பெரும்பாலானோர் சிஎஸ்கே-வை ஆதரித்த நிலையில், நடிகர் ஜெயராமும், பிஜூ மேனனும் ராஜஸ்தானுக்கு ஆதரவளிக்க வந்திருந்தனர்.

Chella

Next Post

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி..

Thu Apr 13 , 2023
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 7,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு […]
ஜூன் மாதத்தில் பரவும் புதிய வகை கொரோனா? அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு பதில்..!

You May Like