fbpx

காவல் நிலையம் முன்பு கட்டி புரண்ட இரு தரப்பினர்….! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர் சேலம் அருகே பரபரப்பு….!

சேலம் அருகே இருக்கின்ற ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் காவல்துறையினரின் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்ததாவது நாமக்கல் மாவட்டம் நல்ல சமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு பெட்ரோல் பங்கில் மறுபடியும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கண்ணன் என்பவர் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்க சென்றபோது ஏற்கனவே தகராறு செய்த நபர்கள் அங்கு வந்ததால் மறுபடியும் அவர்களுக்கிடையில் மோதல் உண்டானது. காவல்துறையினர் முன்னிலையில் இருதரப்பினரும் காவல் நிலைய வளாகத்திலேயே மறுபடியும் தாங்கிக் கொண்டனர் இதில் 2 தரப்பை சேர்ந்த 2️ பேர் மயங்கி விழுந்தனர். தடுக்க முயற்சி செய்த காவல்துறையினரும் நிலை தடுமாறி போயினர்.

இது குறித்து 8 பேர் மீது இதுவரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

’பிக்பாஸுக்கு பிறகு சரியாகிடும்னு நினைத்தேன்’..!! ரச்சிதாவின் கணவர் பரபரப்பு பேட்டி..!!

Fri Jun 23 , 2023
சீரியல் பிரபலங்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ரச்சிதா, தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் ஒன்றினை அளித்திருந்தார். இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். […]

You May Like