fbpx

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தூக்கில் தொங்க விட்ட கொடூரம்..!

தெலுங்கானா மாநில பகுதியில் உள்ள திருமலாகிரி கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி தினமும் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி சென்ற வெள்ளிக்கிழமை அன்று இரவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், சிறுமியை 3 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு தற்கொலை செய்ததை போல் சடலத்தை வீட்டிலேயே கட்டி தொங்கவிட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட 3 இளைஞர்கள் குழுவில் ஏற்கனவே ஒருவன் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார் ஏற்கனவே காவல் நிலையத்தில் இருந்துள்ளது. இதனால், அவர்கள் கூட்டாக சேர்ந்து சிறுமியிடம் அத்துமீறிய நிலையில் கொலை செய்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

கள்ளக்காதலன் உதவியுடன் கணவனுக்கு 'ஸ்லோ பாய்சன்'..!! மாமியாரையும் தீர்த்துக் கட்டிய மருமகள்..!!

Sun Dec 4 , 2022
மும்பையில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 45 வயது தொழிலதிபர் கமல்காந்த் ஷா. இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கமல்காந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாம்பே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு […]
கள்ளக்காதலன் உதவியுடன் கணவனுக்கு ஸ்லோ பாய்சன்..!! மாமியாரையும் தீர்த்துக் கட்டிய மருமகள்..!!

You May Like