இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது. டிசம்பர் தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை தற்போது குறைந்து உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.