fbpx

மக்களே செம குட் நியூஸ்..!! இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு..!! வெளுத்து வாங்கும் மழை..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று வெயில் வாட்டி வதைத்தது. வாக்குப்பதிவுக்கு மத்தியில் வெயிலும் கொளுத்தி எடுத்தது. இதனால் ஓட்டு போட வரிசையில் காத்திருந்திருந்த 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். எனினும், சேலம், நெல்லையில் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்தது. மற்றபடி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் தான் அடித்தது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. எனினும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலை முதல் வெயிலே அடித்து வருகிறது. இந்நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்சி மலைப்பகுதியை ஒட்டி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல், நாளையில் இருந்து 23 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல் இன்று அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நாளை முதல் 23ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Read More : காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா..? இவர்கள் சாப்பிடவே கூடாதாமே..!!

Chella

Next Post

Alert: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலி...! கோவையில் தீவிர சோதனை...!

Sat Apr 20 , 2024
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக கோவை எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் பகுத்து இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் வாத்துகள், கோழிகள் மற்றும் பிற […]

You May Like