தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் தற்போது மிகப் பெரிய பேசு பொருளாக மாறி இருப்பது தக்காளியின் விலை தான். ஆம் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருப்பதால் இல்லத்தரசிகள் மிகப்பெரிய கவலையில் இருக்கிறார்கள்.இந்த தக்காளியின் விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலும் , தக்காளியின் விலை குறைவதாக தெரியவில்லை.
ஆனால் தமிழக அரசு சார்பாக பசுமை பண்ணை கடைகளின் மூலமாக குறைந்த விலையில், தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே மிக விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் தக்காளியின் மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான், தக்காளி தமிழ்நாடு முழுவதிலும் ரூபாய் 180 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.. இந்த ஆலோசனையில் தக்காளியை தமிழக அரசு முழுவதுமாக கொள்முதல் செய்து, ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் வரையில் குறைத்து அனைத்து நியாய விலை கடைகளிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே இதற்கு முன்பே 302 நியாய விலை கடைகளில் குறிப்பிட்ட சமயத்தில் மட்டும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.