fbpx

Today Gold Rate: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்…! ரூ.800 குறைவு..!

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை உயர்ந்து பரமபத ஆட்டம் ஆடி வருகிறது. கடந்த மார்ச் 28ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 6,250 ரூபாயை எட்டியது. இதனால் 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 55,120 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர். கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

தங்கத்தின் விலை பரமபதம் ஆடி வரும் நிலையில், இந்நிலையில் ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நகை விற்பனையாளர்களும் நிபுணர்களும் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

அதன்படி இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.87.00-க்கும், கிலோ ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Kathir

Next Post

வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய கமல்ஹாசன்..!! தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்..!!

Fri May 3 , 2024
உத்தம வில்லன் படம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பாலசந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2015இல் வெளிவந்த திரைப்படம் உத்தம வில்லன். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால், இப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் […]

You May Like