கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்தாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250-வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அவர் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கோகுலத்தில் தான். இதனால் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக பெரும்பாலானவர்கள் கொண்டாடினாலும், அவர் கோகுலத்திற்கு வந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி நாள் என்று யாதவ குலத்தினரும் கொண்டாடும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை உள்ளிட்டவை கோலாகலமாக நடைபெறும்.