fbpx

மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழக பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீடிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இருப்பினும், அந்த வாரத்தின் இறுதி நாட்களை சேர்த்து விடுமுறையை மேலும் நீடித்து அக்டோபர் 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடுமுறை குறுகிய நாளே இருப்பதால், விடைத்தாளை திருத்த கூடுதல் நாள் தேவை என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்து விடுமுறையை நீட்டித்து அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : காதலியை மறக்காத பிரபுதேவா..!! அட குழந்தைக்கே அந்த பெயர் தான் வெச்சிருக்காராமே..!!

English Summary

The Department of School Education has announced that the quarterly vacation of Tamil Nadu school students will be extended.

Chella

Next Post

10 மாத பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது இளைஞன்..!! பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை..!!

Wed Sep 25 , 2024
He took the child who was playing in the yard of the house far away from the house and raped him.

You May Like