fbpx

மகளிருக்கான குட் நியூஸ் : ’’மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி’’ அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு….

மகளிர் சுய உதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட்டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.75 கோடி கடன் தள்ளுபடி தயார் நிலையில் உள்ளது. அது விரைவில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு 20 சதவீதம் விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளனர். என தெரிவித்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் பணிகள் நிறைவு பெற்ற பின்னர் நிவாரணம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Post

ரூ.9.9 லட்சத்தில் கால்வாய் கட்டப்பட்டதாக பொய் கணக்கு… பொதுமக்கள் மேயருக்கு மனு…

Tue Nov 22 , 2022
கால்வாய் கட்டாமலேயே அந்த இடத்தில் ரூ.9.9 லட்சத்துக்கு கால்வாய் கட்டியுள்ளதாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அரசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு மாநகரம் வேலூர் மாநகரம். மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் அலட்சியம் காட்டப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சாலைகள் பணியில் வாகனங்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேர்த்து சாலை போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடிகுழாயை அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. அடுத்தடுத்து […]

You May Like