fbpx

இன்னும் 14 நாட்களில் நிறுத்தப்படும் GPay சேவை..! பணம் அனுப்ப முடியாது..! மாற்றாக எதை தேர்வு செய்யலாம்…!

பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது. பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் GPay சேவை ஜூன் 4, 2024 முதல் Google மூடப் போகிறது என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்தச் செய்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் பயனர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. Gpay மூடப்படும் என்ற இந்த செய்தி உண்மைதான். இதை கூகுள் நிறுவனமே உறுதி செய்திருக்கிறது. கூகுளின் இந்த முடிவால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படப் போகின்றன என்பதை தற்போது பார்க்கலாம். கூகுளின் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுத்தப் போகிறது. அதாவது, கூகுள் பே தடை செய்யப் போவது இந்தியாவில் அல்ல.. அமெரிக்காவில் தான்.

ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும். அதேசமயம் மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து பயனர்களும் Google Wallet-க்கு மாற்றப்படுவார்கள். இந்த தேதிக்குப் பிறகு, Google Pay அமெரிக்காவில் முற்றிலும் பயனற்றதாகிவிடும். கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் Google Wallet-க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 180 நாடுகளில் Google pay ஆனது Google Wallet ஆக மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read More: கொடிய ஆபத்து!… வெஸ்ட் நைல் வைரஸ்!… நேபாளத்திற்கு எச்சரிக்கை!… உலக சுகாதார நிறுவனம்!

English Summary

On June 4, 2024, the U.S. version of the Google Pay app will no longer be available for use. This change does not impact the Google Pay app in India or Singapore, nor does it impact Google Wallet. Learn more about Google Wallet.

Kathir

Next Post

2019ல் அடிக்கல் நாட்டிய மோடி!! 2024ல் கிடைத்த அனுமதி!! விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி!!

Tue May 21 , 2024
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இந்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் […]

You May Like