fbpx

குட் நியூஸ்..! 100 நபர்களுக்கு பசுமை விருது… ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு…!

தமிழக அரசு வழங்கும் பசுமை முதன்மையாளர் விருது பெறுவதற்கு வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை மற்றும் கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க 2024 ஏப்ரல் 15-ம் நாள் கடைசி நாள் ஆகும்.

Vignesh

Next Post

சுட்டுவீழ்த்தப்பட்ட ராணுவ விமானம்!… கைதிகள் உட்பட 74 பேர் பலி!… உக்ரைன் வேண்டுமென்றே சுட்டுவீழ்த்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு!

Thu Jan 25 , 2024
2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருகின்றன. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில், உக்ரைனில் இருக்கும் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானமான இலியுஷின்-76 விமானம், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல் […]

You May Like