fbpx

இன்று காலை 11 முதல் தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…!

தருமபுரியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களைசார்ந்த விவசாயிகளின்‌ சூறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ ஒவ்வொரு மாதமும்‌ முதல்‌ வாரத்தில்‌ வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியதற்கிணங்க, இன்று காலை 11 மணியளவில்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள்‌ சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ தருமபுரி வருவாய்‌ கோட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ வருவாய்‌ கோட்ட அலுவலர்‌ தலைமையில்‌ நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள்‌, விவசாயிகள்‌ மற்றும்‌ விவசாயசங்க பிரதிநிதிகளும்‌ கலந்து கொள்ள வேண்டும் என வருவாய் கோட்ட அலுவலர் வலியுறுத்தி உள்ளார் ‌‌.

Vignesh

Next Post

ஜூன் 12-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டம்...! காங்கிரஸ் சார்பில் பங்கேற்க போகும் தலைவர் யார்...?

Fri Jun 2 , 2023
ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது, ஆனால் காங்கிரஸ் சார்பில் கூட்டத்தில் யார் கலந்துகொள்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பீகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் கூட்டத்தை நடத்த உள்ளார். ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும். ஆனால், யார் பங்கேற்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் […]

You May Like