fbpx

குரூப் 2, 2ஏ தேர்வு குளறுபடிகள்..!! அறிக்கை கேட்கும் டிஎன்பிஎஸ்சி..!! கலக்கத்தில் அதிகாரிகள்..!!

குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை என்றும், சில தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த குழப்பங்கள் தகுதித் தாளான முற்பகல் தேர்வில் மட்டுமே நடந்தததாலும், அது தரவரிசைக்கு கணக்கில் கொள்ளப்படாததால் சிக்கல் இல்லை என்றும் டிஎன்பிஎஸ்சி கருதுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Chella

Next Post

9ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு…..! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு…….!

Wed Mar 1 , 2023
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அதில் எந்தவித பயனும் இல்லை. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(22) அவருடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து வளர்ந்து வந்தார் அப்போது நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியிடம் அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். […]

You May Like