fbpx

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுகின்றது… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி…

தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் தாக்கத்தால் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடல் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேட்டி அளித்தார். அதில் , தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் படுக்கை கூட இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எச்1 என் 1 வைரஸ் தாக்கத்தால் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. டெங்கு சிக்கன் குனியா , அனினோ வைரஸ் , இன்புளூயன்சா காய்ச்சல் பரவுகின்றது. இதில் அதிகமாக எச்1 என்1 வைரஸ் பரவிவருகின்றது. சுவாசக்குழாயை பாதிக்கும் இந்த வைரஸ் மிகவும் மோசமானது.

மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். பொதுமக்கள் , குழந்தைகள் , பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு குழுக்கள் அமைத்து என்ன காய்ச்சல் பரவுகின்றது என்பது பற்றி முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். என்றார்.

தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது.  செவிலியர்கள் மருந்து மாத்திரைகள் இல்லை, ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் இல்லை என தெரிவிக்கின்றனர்.‌ இந்த குற்றச்சாட்டை மறுப்பதை விடுத்து என்ன மாதிரியான தேவைகள் உள்ளது என ஆராய்ந்து பார்த்து அதை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் நலம் குழந்தைகளின் நலத்தை பார்க்க வேண்டும். காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை எனசுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்கறையுடன் அணுக வேண்டும் என அரசை வலியுறுத்துகின்றேன். என்றார்.

Next Post

காவல் நிலையத்தில் மது அருந்திய போலீசார் ….

Mon Sep 19 , 2022
கர்நாடக மாநிலம் கோலார்மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 3 பேர் காவல் நிலையத்திலேயே மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில்உள்ள கவுனி பள்ளி காவல்நிலையத்தில் காவலர்கள் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் நேற்று காவல் நிலையத்தில் இருந்தபோதே மது அருந்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்நிலையத்தில் பணியின் போதே மதுக்கடையாக மாற்றியுள்ள காவலர்கள் மீது […]

You May Like