fbpx

சவுக்கு சங்கர் காரில் அரை கிலோ கஞ்சா…! போதைப்பொருள் உட்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..! மே 17 ஆம் தேதி வரை சிறை..!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அங்கிருந்த பெண் அதிகாரியை சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருப்பவர்கள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பிறகு யூடியூபர் சவுக்கு சங்கர் தங்கியிருந்த ஹோட்டல் அறை மற்றும் காரில் சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரின் காரில் தடை செய்யப்பட்ட அரை கிலோ கஞ்சா மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் மற்றும் இருவர் மீது பெண் வன்கொடுமை, போதை பொருள் தடுப்பு சட்டம், அரசு அதிகாரிகளை பனி செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்துச்செல்லப்பட்டார். சவுக்கு சங்கரை 17ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Kathir

Next Post

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை..! இந்திய வானிலை ஆய்வு மையம்..

Sun May 5 , 2024
தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் மாதம் முதலே வெயில் வாட்ட தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்த வெப்பத்தின் தாக்கத்தால் சில மரணங்களும் நிகழ்ந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன் தான் […]

You May Like