6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 6,8,10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் 7,9,11 வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கேள்வித்தாள்களை மண்டல அளவில் உள்ள பள்ளியில் இருந்து பெற்று செல்ல வேண்டும். அதற்காக பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்து கேள்வித்தாள்கள் பெற்றுச் செல்ல வேண்டும். டிசம்பரில் அரையாண்டு தேர்வு – அட்டவணை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை.
காலையில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள்கள் காலை 7.30 மணிக்கும், மாலையில் நடைபெறும் தேர்வுக்கான வினாத்தாள்கள் மதியம் 12:00 மணிக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்படும். தேர்வினை எந்தவித புகார் அளிக்கும் இடம் அளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.