தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தொடங்கி உள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. தேஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஓமன் – ஏமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கக் கடல் பகுதியை பொறுத்த வரையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது. இதற்கு ஹாமூன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து வங்கதேசம் அருகே வரும் 25ஆம் தேதி கரையை கடக்க இருக்கிறது. இந்த புயலின் காரணமாக கிழக்கு கரையோர மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.