விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை பிஎம் கிசான் திட்டத்தின் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் 12-வது தவணை நிதியை பிரதமர் நேற்று விடுவித்தார். இந்த தொகை விவசாய பயனாளி குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் “பிரதம மந்திரி கிசான் சம்மன்” நிதி 12-வது தவணைத் தொகையைப் பெறவில்லை அல்லது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், 155261, 011-24300606, 011-23381092 ஆகிய எண்களை அழைக்கலாம்.